
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சந்திரமோகன் சம்பந்தபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான சகோதரா!
உங்கள் அன்புச் சிறைக்குள்
அடைபட்டு இன்புற்று இருந்த
இனிய வசந்த காலம் எங்கள்
இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை
அச்சுறுத்த ஏன்? எங்கே?
பிரிந்து போனீர்கள்!
நீ இல்லாத நாமும் நிலா
இல்லாத வானம்!
நம் வீட்டு
சூரியன் அழுகிறது துடைக்க
நினைக்கும் விரல்கள் எரிகிறது
தன்னை உருக்கி பிறருக்கு
ஒளி
கொடுக்கும் மெழுகுவர்த்தி
போல்
உம்மை உருக்கி எம்மை
காத்து வந்த தெய்வமே...
சகோதரங்கள் உமை
நினைத்து
வாடிடவே போனது எங்கேயோ ?
உறவுகளைப் பிரிந்து!
அண்ணை என்று
அழைக்க
நீங்கள் இல்லையே அடி
மனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை
எங்கள்
நினைவுகளில்
கலந்தே இருக்கும்
உங்கள்
நினைவுகள் அண்ணை !
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
May your soul rest in peace