யாழ். கோப்பாய் தெற்கு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சரோயினிதேவி அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா, பறுவதம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், பாக்கியநாதன், யோகநாதன், யோகமலர், சகுந்தலாதேவி மற்றும் சிவநாதன்(ஜேர்மனி), சாரதாதேவி, பரமேஸ்வரன்(ஜேர்மனி), சிவராஜேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன், அன்னலட்சுமி, பரமேஸ்வரி, சுகந்தினி, உதயராணி, காலஞ்சென்ற துரைராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சசிகுமார், சயந்தி, நிசாந்தி, காலஞ்சென்ற கயகுமார் ஆகியோரின் பெரியம்மாவும்,
யான்சி, யான்ஸ்வன், ரவீனா, சைனிகா, தரனிகா, அருள்நேசன், கொளரிகரன், பிரவீனா, பிரவீன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தன் காட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.