4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வசாவிளான் திக்கம்புரையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் முருகேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி ஒளியாகி
எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில் சாந்திபெற
பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்