
-
22 JUL 1942 - 13 NOV 2014 (72 வயது)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் கனகாம்பிகை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-10-2024
ஆருயிர் அம்மாவுக்கு
எங்கள் அன்பான கண்ணீர் பூக்கள்!
பத்தாண்டுகள் சென்றிருந்தால் என்ன அம்மா
உங்களின் பார்வையும் தோற்றமும் செயல்களும்
கண்முன்னே கற்றாடுதம்மா!
எம்மவர் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே அம்மா!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!
அலை அலையாய் வரும் கடல் கூட
வெயிலில் வற்றி விடும்.
என் கண்ணில் கண்ணீர் வற்றவில்லையே...
நித்தமும் உங்கள் நினைவு எங்களை
பித்தம் கலக்க வைக்கிறது...
பத்து ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி 22-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Sri Swarnakarshana Gnana Bhairvar Kovil, 50 Taunton Rd E, Oshawa, ON L1H 7K4, Canada எனும் முகவரியில் நடைபெறும். அதுசமயம் நடைபெறும் மதியபோசனத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொழும்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
