முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் மேரிராணி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 09-02-2022 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் ISHI FULL GOSPEL MISSION, No.18, sankarapillai Lane, Rambaikulam, Vavuniya, Sri Lanka. எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மதிய போசன நிகழ்வு நடைபெறும்.