Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 APR 1929
இறப்பு 07 SEP 2020
அமரர் மரியம்மா ஆசீர்வாதம்
வயது 91
அமரர் மரியம்மா ஆசீர்வாதம் 1929 - 2020 வசாவிளான், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் மரியம்மா அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி அனந்தாசி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இல்லாரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆசீர்வாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மேரி தவமலர், தேவராசா, ரீற்றம்மா, புஸ்பராணி, அன்ரன் சௌந்தரராஜா மற்றும் மேரி செல்வராணி(இலங்கை), சற்குணராஜா, மேர்சி லூர்த்துமேரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கின்சன், ஜெஸ்டீனா, அமலராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அருளப்பு அன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

பௌஸ்ரன் றென்சி, பியறின் பவுஸ்ரினா, கெஸ்ரன் ஜிப்ரோய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு 09-09-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனை தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் கொட்டாஞ்சேனை புனித லூசியஸ் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் மாதம்பிட்டி மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்