3ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் அருணாசலம் உமாபதி
                    
                    
                முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை
            
                            
                வயது 68
            
                                    
            
                    Tribute
                    79
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய்வீதி, இங்கிலாந்து லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் உமாபதி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா
நீங்கள் இறைவனடி சேர்ந்து மூன்றாண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம். 
                        தகவல்:
                        குடும்பத்தினர்