3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் சிவநாதன்
உரிமையாளர் - ஸ்ரீ ஸ்கந்த பவனம் அரிசி ஆலை, அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 80
அமரர் அருணாசலம் சிவநாதன்
1942 -
2023
சின்னப்புதுக்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், சின்னப்புதுக்குளம், யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அருணாசலம் சிவநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் முன்று ஆன போதிலும்
நீங்களின்றிய துயரங்கள்
இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
முன்று வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில்
உங்களின் ஞாபகம் அப்பா மீண்டும் வரமாட்டாரா என
ஏங்குவோம் நாங்கள்!
வானுலகம் சென்றாலும்
எம் வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Sending my heartfelt sympathy to you and your family. You are in my prayers.