2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆறுமுகம் சுதானந்தன்
அஞ்சல் உத்தியோகத்தர் - புளியம் பொக்கணை
வயது 48
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், கண்டாவளையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சுதானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு போனாலும்
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே எமக்கான அர்பணிப்பு...!
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக் காத்த எம் தெய்வமே!
உங்கள் உதிரத்தை உரமாக்கி
மெழுகு போல் உடம்பினை உருக்கி
எமைக் காத்தாய்
இம் மண்ணைவிட்டு நீங்கள் பிரிந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும் நிலைத்து நிற்கும்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்