Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 APR 1943
மறைவு 13 JAN 2021
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம்
இளைப்பாறிய தபால் திணைக்கள உத்தியோகத்தர்
வயது 77
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம் 1943 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
 எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே!

நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்!

தந்தை என்ற சொல்லுக்கு இலக்கணமாய்
தரணி போற்றும்படி எம்மை வளர்த்தீர்கள்
எங்களது முன்னேற்றப்படிகளில் ஐயா
உங்கள் பாதம் பதிந்ததை எப்படி மறந்திடுவோம்

என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழ்கின்றோம்
 உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்