Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 APR 1943
மறைவு 13 JAN 2021
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம்
இளைப்பாறிய தபால் திணைக்கள உத்தியோகத்தர்
வயது 77
அமரர் ஆறுமுகம் சுப்பிரமணியம் 1943 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா(வன்னேரி) தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம்(திருகோணமலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

திருநாவுக்கரசு(திரு- லண்டன்), விஜிதகுமாரி(லதா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகனேஸ்வரன்(குகன்- லண்டன்), ரூபா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரிஷ்வினி, நிதிலானி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

திஷானி, ஷதானி, டினோஷன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

பாலாம்பிகை(திருகோணமலை), காலஞ்சென்றவர்களான சதாசிவம்(கனடா), சிற்றம்பலம் மற்றும் கலமாம்பிகை(திருகோணமலை), சிவானந்தம்(கனடா), பூரணாம்பிகை(சாந்தி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமாரசிங்கம்(திருகோணமலை), ஸ்ரீகாந்தி(கனடா), செல்வராணி(கனடா), சுந்தரலிங்கம்(திருகோணமலை), சிவராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



தகவல்: குடும்பத்தினர்