
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருள்தாசன் யேசுதாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்று ஆண்டுகள்...!
பிரிவு என்ற வலியை நாம் சுமந்து நின்று..
மூன்று ஆண்டுகள் முடிந்தோடி விட்டதையா!
அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ அப்பா....
கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து எத்தனை
ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு நீங்காதவை
உங்கள் நினைவால் வாடும்
மனைவி, மகள்..