1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருள்தாசன் யேசுதாசன்
(அருள், ஜோன்சன்)
வயது 55
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருள்தாசன் யேசுதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து..
இன்றுடன் ஓராண்டு முடிந்தாலும்!
கடந்துவிட்ட ஒருவருடத்தில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதையா ஏன் அப்பா
எங்களையெல்லாம் தவிக்கவிட்டு சென்றாய்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவாயா
அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?
உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, மகள், உறவினர்கள்
தகவல்:
குடும்பத்தினர்