9ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரியரட்ணம் யசோதரன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!
எம் கண்களை கட்டி நீ சென்ற
இடம் தான் எதுவோ…
நாம் கற்பனை செய்த உந்தன் வாழ்வு
எல்லாம் கனவாக போனதே!
நீ இல்லாமல் வாழும் வாழ்க்கை
தான் எதுவோ…
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
ஆனால் நொடிப்பொழுதில்
எம்மை தவிக்கவிட்டு எங்குதான்
முகவரி இல்லாத இடத்திற்கு
தன்னந் தனியே சென்றாயோ!
என்றும் உங்கள் நினைவுகளும் இருக்கும்
குடும்பத்தினர்!!!
தகவல்:
குடும்பத்தினர்