Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAY 1959
இறப்பு 04 APR 2021
அமரர் அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர்
வயது 61
அமரர் அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் 1959 - 2021 யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸை வதிவிடமாகவும் கொண்ட  அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் பொன்னுத்துரை(அல்லைப்பிட்டி முன்னால் உபதபால் அதிபர்) அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற இன்னாசிமுத்து அலெக்சாண்டர், ஞானம்மா(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும், விமலதாஸ் அமுதநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கனுஷி, அலெக்க்ஷி, லுக்க்ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மலர்(இந்தியா), யோசெப்(பிரான்ஸ்), றெஜி(கனடா), யூட்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சகுந்தரராஜன்(இந்தியா), சிவகுமாரன்(இந்தியா), காலஞ்சென்ற தியாகலிங்கம், செல்வராசா(இலங்கை), விமலறஜினி(இந்தியா), விமலறதி(ஜேர்மனி), விமலகோசலை(லண்டன்), விமலகரன்(கருணா பிரான்ஸ்), விமலநாதன்(இலங்கை), விமலேந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்