

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை மேரியோசேப்பினா அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதி, அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(ராசு) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அருளப்பு மகேஸ், டேவிட்(பொன்ராஜா), யோசேப்(தியாகு) மற்றும் பொன்கிளி(வவுனியா), புஸ்பராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதீஸ்குமார்(மானிப்பாய்), சர்மிளா(கனடா), யூட்குமார்(கைதடி), சியாமளா(கனடா), வினோத்குமார்(குருநகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேரிகசில்டா, காலஞ்சென்ற தேவா, நிறஞ்சினி, சத்யானந், ஆன்மேரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஸ்வின், ஒசினேஸ், டாகுக்ஸ், சமிக்கா, சஜின், வலன்சியா, வர்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 31-03-2025 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details