3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நல்லூர் அரசடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகலிங்கம் ஆனந்தராணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை இழந்து ஆண்டுகள் பல கடந்தாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை.....!
நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய்!
நாங்கள் உன்னை பிரியவில்லை - ஆனால்
நீ எங்கள் அருகில் இல்லை
உன்னை யாசிக்கிறோம் - அதைவிட
உன்னை நேசிக்கிறோம்...
எம் மூச்சு காற்றோடு மட்டும் தான் உன் உரசல்கள்
நீ காற்றோடு தானே கலந்துவிட்டாய்..
"எங்கள் உயிரில் கலந்ததுபோல்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு, அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.