5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம்
வயது 82
அமரர் அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம்
1938 -
2020
மன்னார், Sri Lanka
Sri Lanka
Tribute
36
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மன்னாரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளிவிளக்காய்
பாசத்திற்கு ஆசானாய் இருந்தீர்களே
அப்பா...!
அப்பா உன் குரல் கேட்காமல்
ஐந்து வருடங்கள் உருண்டோடி விட்டது
உங்கள் உயிர் பிரிந்தாலும்
நினைவலைகளும் அரவணைப்பும் என்றும்
எங்கள் நினைவில் இருந்து நீங்காது அப்பா
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!
எம் துயர் மறையாது உங்கள் நினைவு!
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்