யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford ஐ
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யசோதரன் சாம்பசிவம் அவர்களின் 1ம் ஆண்டு
நினைவஞ்சலி.
எமைவிட்டு நீ பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது
நீர் எங்களை விட்டுபிரிந்த நாள்முதல்
நாம் உயிரைப் பிரிந்த உடலாய் அலைகின்றோம்
உம் விதியோ! அல்லது நம் விதியோ!
தலையெழுத்து தவறியது...
எம்மோடு பல காலம் இருப்பாய்
என எண்ணி இருந்தோம்
காலம் உன்னைப் பிரித்தது ஏனோ..!
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்
உங்களை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் தவியாய் தவிக்கிறதே!
திரும்ப திரும்ப கேட்டாலும்
திரும்பி வரமாட்டீர்களா
ஆண்டொன்று ஆனதுவோ
ஆறவில்லை எம் துயரம்!
தூண்டிற் புழுப் போல
துடிக்கின்றோம் உமையிழந்து.
மீண்டும் மீண்டும் உங்கள் முகம்
மின்னலென வந்து மறைகிறது.
தோண்ட வரும் தொல்பொருளாய்
உங்கள் நினைவே நிறைகிறது
ஆண்டவனே! எம் அப்பாவை
எங்களிடம் தந்து விடு! இல்லையெனில்
உந்தன் நிழலில் இளைப்பாற வைத்து விடு.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
குடும்பத்தினர்...
May the departed soul „Rest in Peace“ our thoughts and prayers are with you at this sad moment. Deepest condolences to the