யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், உபயகதிர்காமம், புலோலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விநாசித்தம்பி மயில்வாகனம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
“அப்பா… ஒரு வருடம் ஆனாலும்”
ஒரு வருடம் ஆகிவிட்டது அப்பா!
உங்கள் குரல் கேட்டதில்லை,
ஆனா எங்கள் மனசு இன்னும்
உங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறது...
நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு
அடியிலும் உங்கள் நிழல் கூடவே இருந்தது,
இன்று நீங்கள் இல்லாமல் அந்த பாதை
வெறுமையாகி விட்டது அப்பா...
நாங்கள் சிரிக்கும் போது
உங்கள் பெருமை நினைவுக்கு வருகிறது,
நாங்கள் தளரும்போது உங்கள்
வார்த்தைகள் எங்களை தாங்குகிறது...
ஒரு வருடம் ஆனாலும் உங்கள்
அன்பும் வழிகாட்டுதலும் குறையவில்லை,
நாங்கள் வாழும் ஒவ்வொரு நாளிலும்
நீங்களே எங்கள் துணை அப்பா...
நீங்கள் இல்லாத வாழ்க்கை சுலபமில்லை
ஆனா நீங்கள் கற்றுக் கொடுத்த
வாழ்க்கை பாடங்களால் நாங்கள்
இன்னும் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்...
எங்கேயோ இருந்தாலும் எங்களை
பார்த்துக்கொண்டே இருப்பீர்கள் என்று
நம்பிக்கையோடு வாழ்கிறோம் அப்பா…
நீங்கள் எங்கள் தைரியம்
நீங்கள் எங்கள் வாழ்கையின் வழிகாட்டி
நீங்கள் எங்கள் இதயத்தின் முடிவில்லா நினைவு...
💐🕯️ அஞ்சலி 🕯️💐 அமரர் விநாசித்தம்பி மயில்வாகனம் இவர்கள் ஆன்மா சாந்தியடைய எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்....