யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Newbury Park ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகுமாரி வைகுந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ எனக்கு.....
ஆயிரம் மழைத்துளிகள்!!
தாமரை இதழ் நனைத்தோடும்!
அங்கே ஒரு துளி மட்டும்!
தேங்கி நின்று நளினம் ஆடும்!
அந்த ஒற்றைத் துளிதான்
நீ எனக்கு!
ஆயிரம் உறவு எனைத் தாலாட்ட!!
ஏங்கிய இதயம்உனை மட்டும் நாடுதே!
உப்பு கரிக்க அழுத கண்கள்!
ஏக்கம் கலைந்திட உனையே தேடுதே!!
நீ என்பவள் என்னுடையவள்
என!!!
உரத்து கத்த என் தொண்டைக் குழி
ஏங்கித் தவிக்க- என்
நெஞ்சுடை மனம் நிஜம் இதுவா!!
என
என் நெஞ்சறைந்து போகுதே!!
ஐயோ
என் மனம் நித்தம் நித்தம்
செத்துய்து போகுதே!!
வாழ்வொன்று வாழ வேண்டிய
இதயம்
கடினமாய்க் கனக்குதே
என்னவள் நீ அருகில் இருந்தும்
என்னவள் நீ இல்லை எனும் போது
என்
நெஞ்சுனின்று போகுதே!!
வாழ்வே வாழ்வே
மறுமுறை ஒருமுறை வாரயோ!!
நானும் ஒருமுறை உன்னுடன்
முழுதாய் வாழ்ந்திட!
வைகுந்தன் சுப்பிரா️-(கவிதை வடிவமைப்பு: கங்காதீபன், உருப்பிராய்)
Our sincere sympathy to her family members. RIP