Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 21 NOV 1938
இறப்பு 05 JUN 2025
திரு வேலுப்பிள்ளை தேவராஜா
ஓய்வுபெற்ற வரி மதிப்பாளர்
வயது 86
திரு வேலுப்பிள்ளை தேவராஜா 1938 - 2025 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தேவராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மாதம் ஒன்று ஆகியும் மனம் ஆற மறுக்கிறது
 சிரித்த முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய் வாழ்ந்த அப்பா!

 நாட்கள் 31ச் கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல்
 எம்மைக் காத்த அன்புத் தெய்வமே

 ஆறிடுமோ எங்கள் துயரம்
 விதித்ததோர் விதியதால் விண்ணகம்
 சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும் அழியாது
 நினைவலைகள்! பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !

நேசத்துடன் எங்களை ஆளாக்கி
 நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
 உங்கள் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.    

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 05-07-2025 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் வீட்டுக் கிரியைகள் நடைபெறும்பின்னர் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று  மு.ப 11.00 மணிமுதல் பம்பலப்பிட்டி இல, 75 லோரன்ஸ் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் கலந்து கொண்டு பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

முகவரி:
33-5/2, 42ஆம் ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு-06

தொடர்புகளுக்கு:

+94112505853
+94778356087

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்