1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்
(கந்தையா கல்மடு)
வயது 75
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 05-06-2026
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்(கந்தையா கல்மடு) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!!
அப்பா உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய் இருந்து
கொண்டே இருக்கும்...
உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
My heart felt condoleance... Raveendra Family - Paris