Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 AUG 1949
இறப்பு 17 MAY 2025
அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்
வயது 75
அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் 1949 - 2025 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 17-05-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா வேதவனம் தம்பதிகளின் மருமகனும்,

உலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வனஜா, தில்லைநாதன்(வசந்தன் - பிரான்ஸ்), தில்லைநாயகி(வசந்தி- மாவீரர்), தில்லைரூபன்(ரூபன்- பிரான்ஸ்), காலஞ்சென்ற தில்லைரூபி(வதனி), நவநீதன்(ராஜன்- லண்டன்), தவபாலன், யோகலிங்கம்(யாதவன்- பிரான்ஸ்), மங்களேஸ்வரி(வாணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி, சண்முகநாதன்(டென்மார்க்), பாக்கியநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுதாகரன், ஜெயந்திமாலா, மோகனரூபி, தனுசிகா, பிறேமினி, நிலக்சனா ஆகியோரின் மாமனாரும்,

டினோயன், துவாரகன், துஷாரகன், மதுசாயினி, கிருத்திகன், தட்ஷா, நிதட்ஷன், நிருத்விகா, ஆருசன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று பரிசங்குளம் புளியங்குளத்திலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று மு.ப 10:00 மணியளவில் புளியங்குளம் கல்மடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரூபன் - மகன்
தவபாலன் - மகன்
வசந்தன் - மகன்
சுதன் ஸ்ரீ - மருமகன்