15ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வேலுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
1932 -
2009
தாவடி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தாவடி தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தில் வசித்துவந்தவருமான வேலுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உம்மைப் பறித்து
பதினைந்து ஆண்டுகள் நீண்டு
நெடியதாய் கழிந்து போனதே ஐயா!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம் இன்னும்
உடைந்து தான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் பதினைந்து வந்திட்ட
போதினிலும் நம்ப மறுக்கிறதையா
எங்கள் மனங்கள்
காலங்கள் மாறலாம் உங்களை
இழந்த ஆண்டுகள் மாறலாம்.
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால் எப்போதும்
மாற்ற முடியாது..
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்.
என்றும் எம்முள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் ஐயா..!
தகவல்:
மகன் (மோகன்) , மருமகள் (வசந்தா) ,பேத்தி சுமதி ரூபன்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,குடும்பத்தினர்.
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute