1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை வீராசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு பேராண்டாய் ஓடியும்
ஓடாத துயரோடு ஒடுங்கிக் கிடக்கின்றோம்
வேராக இருந்த நினைவில்
வேறாக போய்விட்ட நினைவில்
அப்பா அப்பா என்று எங்கள் நா
அழைக்கிறது ஆனாலும் நீங்கள்
வரவில்லையே அப்பா
எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்