Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 04 JAN 1945
விண்ணில் 20 OCT 2016
அமரர் வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள்
(சண்டி அண்ணா)
வயது 71
அமரர் வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் 1945 - 2016 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், இந்தியா மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீர் இறையடி எய்தியதை
இன்றும் நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
 வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!

காலத்தால் எமை விட்டு நீர் பிரிந்தாலும்
உம் நினைவு எமை விட்டுப் பிரியவில்லை
நாம் இங்கே தவித்து நிற்க
எமை விட்டுப் போன தெங்கேயோ?

வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!

எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
 இதயதுடிப்பு உள்ளவரை
எங்கள் இதய தீபம் நீங்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices