1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலாயுதபிள்ளை சிவபாக்கியம்
1950 -
2021
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை சிவபாக்கியம் அவர்களின் 01ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:12/09/2022.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா
எமதுள்ளம் ஆறாத
துயரம் இன்னும்
நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று
நாமறிய
பண்பில் உயர்ந்து
நின்றாய் நேசமிது
தானென்று
எங்கள் நெஞ்சமதை
நெகிழ வைத்தாய்!
சிரித்த முகம் மாறாத சிறுபிள்ளை
போன்ற உள்ளம் உற்றார் உறவினரை
வரவேற்று உபசரிக்கும்
உயர்ந்த
குணம் வாடி நிற்கும்
மனிதருக்கும்
சேவை பல செய்தாயம்மா!
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன்
சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில்
கலந்திருக்கும்
உங்கள் பாதங்களில்
கண்ணீர்த்
துளிகளாலே ஆராதனை
செய்கின்றோம்
அம்மா
அம்மா......
எண்ணிலடங்கா நினைவுகள் எம்முடன்!!!
தகவல்:
குடும்பத்தினர்