

திதி:20/07/2025
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை கெங்கராசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே
பாசத்தின் உறைவிடமே
எங்கள் அப்பா கலகலப்பன பேச்சும் கனிவான
புன்னகையும் பாசத்துடன் உறவாடும்
உங்கள் அன்பையும் பல ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து கண்ணீர் சிந்துகின்றோம்
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும் துளியின் வழியில்
உங்களை நாங்கள் கண்டிட முடியாது
கன காலம் எம்மோடு வாழ்வீர்கள்
என்று நம்பி இருந்தோம் கணப் பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கண் கலங்க வைத்தது அப்பா?
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீங்கள் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம்!
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா- மூன்று
வருடம் விரைந்தே போச்சுதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம் -ஆனாலும்
ஆண்டுகள் மூன்றென்ன எம்
உயிர் மூச்சு உள்ளவரை
என்றென்றும் உணர்வுடன்
கலந்திருக்கும் உங்கள்
அன்பும் நினைவுகளும்..!
உங்கள் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள்,
சகோதர சகோதரிகள்
மற்றும் குடும்பத்தினர்..!