10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வசந்தகுமாரி சந்திரகுமார்
1970 -
2013
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்.மாகியம்பதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வசந்தகுமாரி சந்திரகுமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் பத்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா
உயிரை தந்து உடலில் சுமந்து
உலகில் வாழ உருவம் தந்த
தெய்வம் நீயம்மா!
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
இதயபூர்வமான அஞ்சலிகள், ஆண்டுகள் பத்து ஓடிமறைந்தது, ஆனாலும் இன்னும் மறையவில்லை உங்கள் இழப்பும், எங்கள் தவிப்பும் என்றும் மறப்போமா உங்களை, எங்கள் உயிர் உள்ளவரை. மாலா குடும்பத்தினர். ஜெர்மனி.