3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வரதேஷ் திருநாவுக்கரசு
(ரவி/ லம்போ)
வயது 39
Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வரதேஷ் திருநாவுக்கரசு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ இப்பூவுலகை விட்டு மறைந்து
ஆண்டுகள் மூன்று கடந்து விட்டது.
இன்றும் நீ எங்களுடன் இல்லை
என்பதை எம்மால் நம்பமுடியவில்லை.
ஆண்டுகள் பல ஆனாலும்
மாறவில்லை உன் மறைவு வலி
உன் சட சட பேச்சும்
உதட்டோரப் புன்னகையும்
என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்!
நாம் கண் தூங்க நினைத்தாலும்
விழிமடல் முழுதும் நீ தானே!
நிறைந்து நிற்கின்றாய்
நீண்டு நீ வாழ வேண்டும்
என்றே தானே நாம் விழித்திருந்தோம்
இடை நடுவில் எமைப் பிரிய நாம்
என்ன பாவம் செய்தோமோ?
மீண்டும் நீ வந்திட ஒரு
விந்தை தான் நிகழாதோ?
வித்துடல் மறைந்தாலும் உன்
நினைவுகள் என்றும் எம்முள்
புதைந்திருக்கும்!!!
தகவல்:
குடும்பத்தினர்
5th Year Anniversary! I can't believe that it has been so long. I love you so much and miss you every single day!!!! I know you are watching me from heaven every second and will always be with me...