யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வனிதா மகேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் விட்டுச்சென்ற அழகான
ஞாபகங்கள் என்றுமே
வெளுத்துக்
கலைந்து போகாது
நீங்கள் தந்த சந்தோஷ
தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும்
இணையாய் எங்களுக்கு
விளைந்து போகாது
நீங்கள் இல்லாத உலகம்
இருள்
சூழ்ந்த முழு வெறுமையை அன்றி
வேறெதையும் தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது
உங்கள் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும்
வரை
வற்றிப் போகாது
ஆண்டொன்று கடந்தாலும் அம்மா
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எம்
மனதை விட்டகலவில்லை அம்மா!
உங்கள் கரம்பிடித்து நடந்த நாட்கள்
நீங்கள் தாலாட்டுப்பாடி உறங்கிய நாட்கள்
அமுதூட்டிய உன் அன்புக்கரங்கள்
இதயத்தின்
ஆழத்தில் புதைந்த
வேர்களாய்
நித்தம் நித்தம்
அலை மோதுதம்மா!
எங்கள் தெய்வத்தின் ஆத்மா
சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
என்றும் உங்கள் நினைவில்
கணவர்,பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.Deepest sympathies to Suseela acca and Geetha family Thiyagalingam Sydney