உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04.07.2021
அமைதியான புன்முறுவல் பூக்கும் முகம்! இரக்கமுள்ள மனம்! பாசத்தால் அரவணைத்து செல்லும் கைகள்!
அறிவூட்டி சீராட்டி வளர்த்த தந்தையே ! அன்பான அறிவு தந்து அரவணைத்து மகிழ்ந்தவரே !!
அன்பிற்கே சாவு என்றால் அகிலமே தாங்காதப்பா! என்னுயிர் அப்பா வந்து விடுங்கோ! ஏங்கி நாம் தவிக்கின்றோம்
உயிர் உன் உடலை விட்டு பிரிந்தபோதும் கூட புன்னகை மாறாமல் வாடாத மலராக இறைவனிடம் சென்றாயோ? நீ விதையிட்டு சென்ற கனகாம்பரமும் உன் புன்னகை போல் வாடாத மலராக புன்னகை வீசுகிறது!
"மறுக்க முடியாத உண்மை மரணம் என்றாலும் ! உங்கள் ஞாபகம் நெஞ்சை நனைக்கிறது அப்பா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..