1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவராஜதுரை வள்ளிநாயகி
(குட்டிபவா)
வயது 85
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், இந்தியா சென்னையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவராஜதுரை வள்ளிநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் – நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள் நெஞ்சமதை
நெகிழ வைத்தாய்!
உங்களை உருக்கி
எங்களை உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை
எமக்கு உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும்
காலம் இனி என நாம்
மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்