யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், நாகர்கோவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சுந்தரலிங்கம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 20-04-2022 புதன்கிழமை அன்று அதிகாலை 05:00 மணியளவில் நாகர்கோவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அருகாமையில் நடைபெற்று நாகர்வோவில் சமுத்திரத்தில் அஸ்தி கரைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 12:00 மணியள்வில் எமது இல்லத்தில் நடைபெறும் சபிண்டியிலும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.