யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கதிரவேலு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் குடும்பத்தின் அன்புத் தெய்வம் வைத்திலிங்கம் கதிரவேலு அவர்களின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக்கிரியை 15-05-2025 வியாழக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக்கிரியை 17-05-2025 சனிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற உள்ளதால், அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிவசுந்தரம் விதி,
வட்டக்கச்சி.