யாழ். வதிரி மகேஸ்தானைப் பிறப்பிடமாகவும், அல்வாய் சாத்திரியார் வளவை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow Chingford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து சபானந்தராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-02-2026
ஆண்டு ஒன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு
ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எம் அப்பாவே
அப்பா அப்பா என்று நாங்கள்
அழைக்கின்றோம் ஆனாலும்
நீங்கள் வரவில்லையே அப்பா
உம் பொன்முகம்
எம் கண்முன்னே தெரிகிறது அப்பா
ஆனாலும் அது நிஜமில்லை என்று
தெரிந்த பின்பு நெஞ்சு கனக்கிறது அப்பா
விழிநீர் சொரிகிறது அப்பா
வேதனையில் துடிக்கின்றோம்
பாசமிகு அப்பாவே
நேசமுடன் உமை நினைக்க
மறுபிறப்பு உண்டென்றால்
எம்மடியில் வந்து விடுங்கள் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்
ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!