Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 10 NOV 1971
விண்ணில் 01 NOV 2022
அமரர் வடிவேலு ஜெயக்குமார்
வயது 50
அமரர் வடிவேலு ஜெயக்குமார் 1971 - 2022 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அச்சுவேலி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Sønderborg ஐ வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு ஜெயகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நேற்று நீ இருந்தாய் உன்னோடு நாமிருந்தோம்
நிஜமாய் நீ இருந்தாய் இன்று நினைவாய்
மாறிவிட்டாய் கண்ணிமைக்கும் நேரத்தில் நீ
கண்ணீர் துளியானாய் !

உயிர் உருகிய - அந்த கணப்பொமுதை
நினைக்க மனம் மறுக்குதையா..
நீ இருந்த இடமெல்லாம் நீ நடந்த சாலைகளெல்லாம்
உன்னை நினைவு படுத்துதையா ..

நீ பேசிய வார்தைகள் எல்லாம் எம் காதினிலே ஒலிக்குதையா ..
காரிருளில் கலந்தவனே - உன் புன்சிரிப்பு எங்கே ?
மீட்டும் விரல்களைத் தொலைத்த வீணைகளாய் நாமிங்கு ,
காலங்கள் கடந்து போனாலும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நிஜம் ஒன்று நிழலாகி- இன்று நீ எம் மனதோடு வாழ்கின்றாய்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியையும், ஆத்மசாந்திப் பிராத்தனையும் 01.12.2022 வியழக்கிழமை அன்று மதியம் 11.00 மணியளவில் நடைபெற உள்ளது என்பதையும் தெரிவித்து கொண்டு அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 03.12.2022 சனிக்கிழமை அன்று 12:00 மணியளவில் இடம்பெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மதிய போசனம் இடம்பெறும் இடம்: Hf Sønderskov Rosonstien 1, 6400 Sønderborg, Denmark

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 06 Nov, 2022