யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், Burgdorf சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திராபிள்ளை தங்கலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அம்மா ! அன்பு தீபமே... நீ அனைந்து விட்டாய்
நெஞ்சுருகி அழவைத்து விட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டாய்
காலை கன்விழித்த நொடி முதல் உன் ஞாபகங்கள்
உன் நினைவுகள் என் மனதில் அழியா சுவடாய் பொதிந்துள்ளன
நீ இல்லா வாழ்க்கை நரகமாய் உள்ளது அம்மா!
உன்னை பிரிந்த நாள் முதல் இன்று வரை
உன் அன்பிற்கு இணை யாருமில்லை!
உன் பாசத்திற்கு ஏங்கும் எனது ஏக்கங்கள்
உனரமுடியாத வலியாம் என்னை கொல்கிறது
இன்றோ உனது நினைவு நாள், ஆனால்
எம் மனம் நினைவஞ்சலி செலுத்த மறுக்கிறது
நீ வேண்டும், உன்னுடன் வாழ்ந்த அந்த
பொக்கிஷமான நாட்கள் மீண்டும் வேண்டும்!
திரும்பி என்னிடம் வா அன்னையே!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் கனத்த இதயத்திலிருந்து எம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மானிப்பாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிப் பிரார்த்தனையில் கலந்து கொண்ட அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்