
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இல.1030, திருநகர் தெற்கு கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திரா இராமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-05-2025
எம் பாசமிகு தந்தையே ஆண்டு ஒன்று
ஆனது நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
அழுது அழுது புலம்புகின்றோம்
உங்கள் பிரிவு தாங்காமல்
ஒர் ஆண்டு அல்ல பல
பத்தாண்டுகள் ஆனாலும்
மறவோம் உங்களை
அன்பின் பிறப்பிடமாய் பாசத்தின் உருவாய்
நேர்மை தவறாத பண்பாளனாய்
நல்லதோர் மகனாய்
மருமகனாய் சகோதரனாய்
மைத்துனனாய் தந்தையாய்
எல்லோருக்கும் உதாரணமாய்
திகழ்ந்தீர்கள் அப்பா!
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும்
எமக்காகத் தந்து எங்கள் உயர்வே உங்கள்
ஒரே இலட்சியமாய் கொண்டு வாழ்ந்தீர்கள்
அப்பா!
என்றும் நீங்கா நினைவுகளுடன் தங்களைப்
பூஜிக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள்...
A Tribute to a Remarkable Man: Uncle I first met uncle during our high school days. Though he often worked abroad, his visits home were always filled with joy and excitement. He was a man full of...