Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 AUG 1966
இறப்பு 28 NOV 2016
அமரர் துரைசிங்கம் மகேந்திரன்
வயது 50
அமரர் துரைசிங்கம் மகேந்திரன் 1966 - 2016 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் மகேந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் காத்தாயே!
பண்போடும் பணிவோடும் பாசமாய் வளர்த்தாயே!
நட்போடும் நலமோடும் நாளெல்லாம் வாழ்ந்தாயே!
வாழ்ந்த கதை சொல்லும் முன்னே- நீ!
வீழ்ந்த கதை வந்ததென்ன- எமக்கு
நேர்ந்த கதி என்னவென்று- எம் நெஞ்சம் தான் அறியும்!

ஒன்றும் சொல்லாமல் உத்தமனே நீ போக!
உடைந்து போனதய்யா உள்ளம் தானிங்கு
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
நித்தம் எங்களை நிலைகுலைய வைத்தாயே!
காற்று போல நீ காணாமல் போனதனால்!
தோற்றுப் போனதய்யா நாம் தொடங்கிய எல்லாமே!

அப்பா வேண்டும் என்று அன்பு பிள்ளைகள் தினம் ஏங்க!
இரக்கம் கொண்ட நீ எதிரில் வந்தது போல்
ஏங்கி பிள்ளைகள் நின்ற எல்லா பொழுதுகளும்
தாங்கி தான் கொண்ட தங்க கரம் ஒன்று
தானாய் மனமுவந்து தன் பிள்ளைகளின் கரம் சேர்த்து
காக்கும் கடவுளாய் கண்மணிகளை ஏந்திக்கொள்ள
சொல்ல வார்த்தை இல்லை சொந்தங்களும் புரியவில்லை!
சோதனைகள் எல்லாமே சொல்லவும் முடியவில்லை!

நேற்றுப் போல் எல்லாமே நெஞ்சோடு நிறைந்திருக்க
நீங்காத உன் நினைவோடு நாம் நித்தமும் வாழ்கின்றோம்!
ஆண்டு மூன்று ஆனாலும் அன்பு கொண்ட உன் வதனம்
அருகில் இருப்பது போல் உணர்கின்றோம் அன்பால் என்றும்!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

உங்கள் பிரிவால் துயரில் மிதக்கும்
மனைவி, பிள்ளைகள், உறவுகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices