Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 31 OCT 1932
மறைவு 12 JAN 2022
அமரர் துரையப்பா நவரட்ணம் 1932 - 2022 யாழ். அத்தியடி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா நவரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அப்பா!
 புன்னகை தவழும் உன்முகம் மறைந்து
மாதம் ஒன்று ஆனதப்பா

உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில் யாரும்
எமக்கு தரப்போவதில்லை அப்பா!

 தொலைத்துவிட்டோம் என்று
 நாம் எண்ணவில்லை.....
 காணவில்லை என்றெண்ணிக்
கலங்குகின்றோம்...
எம்முள்ளே நீங்கள் என்றும்
எம்மை வாழவைப்பீர்கள் நாமறிவோம்

ஆனாலும்
அப்பா என்றழைத்தவுடன்
கேட்பதற்கு யாருமில்லை....
உங்கள் முன் என்றும் குழந்தைகளாய்
 நாம் வலம் வந்தோம் இனி என் செய்வோம்???

தூரதேசம் இருந்தாலும்
தேடுவதற்கு ஒர் தந்தையுண்டு
 என்று மகிழ்ந்திருந்தோம்
 இனி யாரும் இல்லையாப்பா...
உங்களைப் போல் அன்பாக அழைப்பதற்கு...

உங்கள் அன்பிற்காக ஏங்கித் தவிக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

எங்கள் அன்பு தெய்வத்தந்தை ஆண்டவர் அடிசேர்ந்த செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து தொலைபேசி, மின்னஞ்சல் சமூக வலைத்தளங்கல், முகநூல் ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட வேளையில் போதும், ஈமைக்கிரியைகளின் போதும் மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலித்தியவர்களுக்கும், எமக்கு சகல வழிகளிலும் உதவிகள் செய்து ஆறுதல் சொன்ன அன்பு உள்ளங்களுக்கும் உற்றார், உறவினார், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமாற்ற நன்றிகள் தெரிவித்து கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 31 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.