Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 MAY 1950
இறப்பு 14 MAY 2020
அமரர் துரையப்பா கனகசுந்தரம்
வயது 69
அமரர் துரையப்பா கனகசுந்தரம் 1950 - 2020 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி:05/05/2025

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு இணுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா கனகசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் ஐந்து ஆன போதிலும்
நீங்களின்றிய துயரங்கள் இன்னும்
ஆறவில்லை அப்பா!!

எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

ஐந்து வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில்
ஓயாத அலைகளாய் ஒவ்வொரு நாளும்
ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என
ஏங்குவோம் நாங்கள்!

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்