Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 MAY 1950
இறப்பு 14 MAY 2020
அமரர் துரையப்பா கனகசுந்தரம்
வயது 69
அமரர் துரையப்பா கனகசுந்தரம் 1950 - 2020 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு இணுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு வத்தளயை  வதிவிடமாகவும் கொண்டிருந்த துரையப்பா கனகசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்னை விட்டு மறைந்தாலும்- எம்
நெஞ்சை விட்டு மறைவதில்லை!
கண்முன்னே வருவாயா
கதறுதிங்கே உறவையா!

நீயறியா வேளையிலே
மண்ணை விட்டுச்சென்றாயே!
கண் விழித்துப் பார்த்திருப்பாய்
கதறி நீயும் அழுதிருப்பாய்!

இறைவனின் சன்னிதியில்
இரு கரம் கூப்பி நிற்பாய்- உன்
உறவுகளைக் காண்பதற்காய்
மறுபிறவி கேட்டு நிற்பாய்

ஐயாவை நாம் நினைத்தால்
ஆன்மாவே கலங்குதையா!
இறையவனின் கண் கலங்கும்
இழப்பு உந்தன் இழப்பையா!

இழப்புகளும் அழிவுகளும்
இயற்கையின் நியதியையா!
நீ இல்லை என்கையிலே- எங்களுக்கு
உலகமே இல்லை ஐயா! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதீபா - மகள்
மங்கையர்க்கரசி - மனைவி