

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த தியாகராசா பத்மகாந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 14-07-2025
இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் மறைவால்- நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்..
உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்க
யார் கண் பட்டதுவோ- என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர் அப்பா!!!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
அப்பா நாம் மறக்கவில்லை
உமை என்றும் நினைப்பதற்கு!
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 14-07-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 441, ஆனந்தபுரம் கிழக்கு, கிளிநொச்சி எனும் முகவரியில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.