Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 17 NOV 1940
இறப்பு 22 JAN 2025
அமரர் திருமஞ்சணம் சோமசுந்தரம்
வயது 84
அமரர் திருமஞ்சணம் சோமசுந்தரம் 1940 - 2025 பெரியநீலாவணை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அம்பாறை பெரியநீலாவனையைப் பிறப்பிடமாகவும், கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமஞ்சணம் சோமசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கூட நடந்த கால்கள் எங்கே
கூட்டி சென்ற கைகள் எங்கே
கூடைப் பூக்கள் கொட்டுகின்றோம்
இங்கு வர மாட்டாயா?

விரல் பிடித்து பள்ளி சேர்த்தாய்
விரதம் இருந்து கோயில் போனாய்
குரல் எழுப்பி அழைக்கின்றோம்
மீண்டும் வர மாட்டாயா?
வண்ணம் சேர்த்து வாழ்க்கை தந்தாய்
வாசம் வீசும் நேசம் தந்தாய்
கண்ணும் மனசும் கனத்து பேச்சும்
காண முடியாதா உன்னை..?

அன்னம் இட்டு அன்பு சேர்த்தாய்
கல்வி இட்டு அறிவு தந்தாய்
இன்னும் இனியும் நீயே வேண்டும்
என்று மீண்டும் நீ வருவாய்....?
அம்மா ... அம்மா..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி ஆத்ம சாந்திக்கிரியைகள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று எமது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்தி பெற பிரார்த்திப்பதோடு அன்றைய தினம் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.




இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.