அமரர் தில்லைநடராஜா சதீஸ்குமார்
பொறியியலாளர்- குவின்ஸ்லாந்து போக்குவரத்து, பிரதான வீதி திணைக்களம், அவுஸ்திரேலியா
வயது 50
அமரர் தில்லைநடராஜா சதீஸ்குமார்
1970 -
2021
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பனே சதீஷ்
வெள்ளியன்று அந்தி சாயும் வேளை
நீ எங்களையெல்லாம்
விட்டுப்பிரிந்தாய் என்ற பேரிடியை சுமந்து வந்தது எமது what’s
மிதிலையின் நாயகியை வில்லுடைத்து கரம்பிடித்த நாயகனே
சதீஷ்....பொறுக்குதில்லையடா...
நெஞ்சம் ஏற்க மறுக்குதடா....
அம்மாவின் ஈன்ற வயிறு
எரிந்து புலம்புவது கேட்காதோ...
பாசக்கயிற்றை அறுத்தெறிந்து விட்டு
பதறுகின்ற மனைவியிடம் மீண்டு வர மாட்டாயோ....
தேம்பியழுகின்ற மகனை
அள்ளி அணைக்க திரும்பிவர மாட்டாயோ....
அக்கம் பக்கம் சொந்தமெல்லாம் உன்னைக்காணாமல் தேடுவது
தெரியவில்லையோ உனக்கு....
ஏனிந்த பொல்லாத பிடிவாதம்....
ஆண்டாண்டு காலம் அழுதுபுரண்டாலும்
மாண்டார் மீண்டுவருதில்லையே....
பாசங்கொண்ட நண்பர்கள் குளாமெல்லாம் உனது பாட்டைக் கேட்க படையெடுத்து நிற்கிறார்கள்...
மீண்டு வந்து பாடமாட்டாயோ என
பரிதவிக்கின்றார்கள்....
வையத்தே வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கை போதுமென்றா புறப்பட்டாய்.....
நேசமுடன் பிரபாகரன்??? UK
Write Tribute
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss Please accept our condolences