10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தில்லைச்செல்வம் கஜானந்
வயது 27
அமரர் தில்லைச்செல்வம் கஜானந்
1984 -
2011
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வாட்டரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லைச்செல்வம் கஜானந் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
வரமிருந்து கேட்டாலும்
வாழ்க்கையிலே உன்னைப்போல்
தரமான மகன் ஒன்று
தரணியிலே யார் பெறுவார்?
மாறாது எம் துயர்
மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ
சென்றுவிட்டாய் என்று எங்களால்
சிறிதும் எண்ணத்தோன்றவில்லையடா..
சொரியும் நீர் துடைக்க
வந்திடுவாய் என் மகனே...
நிழல் நீ தான் என்று இருந்தோமே..
பூப் போன்ற உன் அழகு முகத்தை
புகைப்படமாய் வைத்து
நித்தம் அழுகின்றோம் ஐயா!
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
உம் நினைவு என்றென்றும்
எம்மனதில் நிறைந்திருக்கும்...
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்!
தகவல்:
குடும்பத்தினர்