10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தில்லையம்பலம் பரநிருபசிங்கம்
வயது 91
அமரர் தில்லையம்பலம் பரநிருபசிங்கம்
1921 -
2013
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், பின்னர் மொன்றியல் கனடாவில் வாழ்ந்தவருமான தில்லையம்பலம் பரநிருபசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே பாசத்தின் பிறப்பிடமே
எம்மை விட்டகன்று ஒரு சகாப்தம்
ஆயினும் உங்கள் நினைவுகள் எமக்கு பல சகாப்தம்...
பக்குவமாய் எமை வளர்த்து காத்து
கல்வி அறிவு தனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்.
நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய் சொன்ன வார்த்தைகள்
என்றும் எம் மனங்களில் வாழுதையா!!!
பத்து வருடம் ஆகியும் பத்து நிமிடம்
கூட உங்களை மறக்க முடிய வில்லை
எத்தனை உறவுகள் பல வந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதை விட்டு விலகாது.
உங்கள் ஆத்மா சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Life takes a toll on everyone. He reigned and suffered. Always a legend. Hope you're resting well.