யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த தேவபாலன் தர்மேந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நம்ப முடியவில்லை உடன்பிறப்பே உன் இறப்பை..!
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
வளர்ந்து வந்த வழி மாறி
நீ எங்கே சென்றாயடா!
என்னருமைச் சகோதரனே!
அனைத்தும் உனதருகில் இருந்தும்
முடியாமல் போனது எப்படி!
விதியா? இறைவனின் சதியா?
மீண்டும் உன் முகம் ஒரு முறை தோன்றாதடா?
மறுபடியும் உன் முகத்தை பார்த்திடுவோமா?
எம்மால் ஆறமுடியவில்லையடா
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!
ஆசை மகனே எம் குடும்பத்தில்
வந்துதித்த எம் அப்புவே
பாசமுடன் உனை அணைத்து
பக்குவமாய் வளர்த்தெடுத்து
பாரினிலே உன் அழகை
நாம் ரசித்து நின்றபோது
பாவிகள் எங்களை பரிதவிக்க விட்ட எஙகள் ஐய்யாவே?
ஆண்டொன்று கடந்த பின் உம் நினைவு நாடி
ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்
எம் மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
எம்முள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்.
உமக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடும்
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய் நீ இருப்பாய் எங்கள் அப்புவே
ஈரவிழிகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் வாடும் அம்மா, அப்பா,
சகோதரிகள், பாபா